×

வாழப்பாடி அருகே வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்திய 11பேர் மீது வழக்குப்பதிவு

வாழப்பாடி, ஜன.22: வாழப்பாடி அருகே ரங்கனூர் பகுதியில் தடையை மீறி மீண்டும் வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தியதாக 11பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையத்தில்,  பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 18ம் தேதி தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வங்காநரியை பிடித்த 11 பேர் மீது வழங்குப்பதிவு செய்து, ₹55 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்நிலையில், வாழப்பாடி அருகே கொட்டவாடி கிராமத்தில், மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம், தடையை மீறி மீண்டும் வங்காநரி ஜல்லிக்கட்டு நடந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், வாழப்பாடி வனத்துறையினர் விரைந்து சென்று, வந்காநரியை மீட்டு, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று மூன்றாவது முறையாக, வாழப்பாடி அருகே ரங்கனூர் பகுதியில் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடந்தது. இதுகுறித்து அறிந்த வாழப்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வங்காநரியை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இதுதொடர்பாக 11பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,Vazhappady ,Vankanari Jallikattu ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...