ஜீப் மோதி பெண் படுகாயம்

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 22: திருக்காட்டுப்பள்ளி அருகே ஜீப் மோதி இளம்பெண் படுகாயமடைந்தார். திருக்காட்டுப்பள்ளி அருகே நடுப்படுகை மெயின் ரோடு மதியழகன் மனைவி முத்துலெட்சுமி (40). இவர் கடந்த 14ம் தேதி தனது மகள் திவ்யாவுடன் (23) திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று பொங்கல் பொருட்கள் வாங்கி கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். வளப்பக்குடி சாலை மயானம் அருகே நடந்து வந்தபோது எதிரில் வேகமாக வந்த ஜீப் மோதி திவ்யா படுகாயமடைந்தார். இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் முத்துலெட்சுமி நேற்று புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் கார்த்திக், ஜீப்பை ஓட்டி வந்த வையம்பட்டி கல்யாணசுந்தரம் (51) என்பவரை பிடித்து வந்து விசாரித்தார்.

Related Stories: