×

பெரம்பலூரில் 24ம் தேதி

பெரம்பலூர்,ஜன.22: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்க பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர் பாசனம், வேளாண்மை கடனுதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி