×

மங்கலக்குன்று புனித தெரசா கல்லூரியில் தொழில் முனைவோர் ேதசிய கருத்தரங்கம்

கருங்கல், ஜன. 22: கருங்கல் அருகே உள்ள மங்கலக்குன்று புனித தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் தொழில் முனைவோருக்கான சிறந்த வாய்ப்புகள் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் டேவிட் ராஜபோஸ் தலைமை வகித்தார். துறை தலைவி அருட்சகோதரி லீமாறோஸ் வரவேற்றார். மங்கலக்குன்று பங்குதந்தை பிரான்சிஸ் வின்சென்ட் வாழ்த்துரை வழங்கினார். துறை பேராசிரியர் வில்சன் கருத்தரங்கம் குறித்து பேசினார்.

இந்த கருத்தரங்கில் சென்னை தொழில் முனைவோர் கூட்டமைப்பு போடியம் தலைவர் வெங்கட்ராமன் ேஜாதி பாபு வணிகவியல் துறையில் ஒரு தொழில் முனைவோராக உருவாக மாணவர்கள் தெரிந்துகொண்டு சாதிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்லூரி முதல்வர் சான்றிதழ் வழங்கினார். பேராசிரியை பெல்லா ஜோஸ்பின் நன்றி கூறினார்.

Tags : Mangalakunnu ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...