×

திங்கள்சந்தை அருகே சீட்டு பணம் வசூலித்த வாலிபருக்கு அடிஉதை

திங்கள்சந்தை, ஜன.22: திங்கள்சந்தை அருகே தலக்குளம் தும்பவிளை பகுதியை சேர்ந்தவர் அரசு(20).பெயிண்டர். மேலும் சீட்டு பணம் பிரிக்கும் தொழிலும் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு அரசு, சீட்டு பணம் வசூல் செய்தபோது அதே பகுதியை சேர்ந்த அருள் பிரகாஷ், ஹரிஹரன், வினீத், தினேஷ் ஆகிய 4 ேபரும் சேர்ந்து  அவரை அடித்து உதைத்தனர். இதை பார்த்த அரசின் நண்பர் மணிகண்டன், கும்பலை தடுக்க முயன்றார். இதனால் ஆவேசம் அடைந்த அவர்கள் மணிகண்டனையும் சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : plaintiff ,market ,
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...