×

மயிலாடுதுறை அருகே பிளஸ் 2 மாணவி கடத்தல் ‘மெடிக்கல் ரெப்’ மீது வழக்கு

மயிலாடுதுறை, ஜன.22: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் குணதலபாடியை சேர்ந்த செல்வராஜ் மகன் ரூபன். இவர் தனியார் மெடிக்கல் நிறுவனத்தின் பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவரை பின் தொடர்ந்து செல்வதும், அவரிடம் பேச்சு கொடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளார். அந்த மாணவி குத்தாலம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற அந்த மாணவி, பள்ளியின் சுவரை ஏறிக்குதித்து தப்பினார். அவரை மெடிக்கல் ரெப் ரூபன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. உடனே மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ரூபன் மீது சிறுமி கடத்தல் வழக்குப் பதிவுசெய்து தேடி வருகின்றனர். 18 வயது நிரம்பாத மாணவி என்பதால் ரூபனை பிடித்ததும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறுவர் சிறுமியை பாதுகாத்தல் சட்டமான போஸ்கோ சட்டம் பாயும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : student ,Mayiladuthurai ,Plus Two ,
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...