×

மயிலாடுதுறை அடுத்த கிளியனூரில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் போலீசார்

மயிலாடுதுறை, ஜன.22: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலைத்தில் புகார் அளித்தும் போலீசார் அலட்சமாக கள்ளச் சாராய வியாபாரிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனக்கூறி நேற்று மயிலாடுதுறை ஆர்டிஓ மகாராணியிடம் கிளியனூரை சேர்ந்த இளைர்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: செந்தமிழ்செல்வின் மகன்கள் மற்றும் மறுமகள் ஆகியோர் எந்த நேரமும் கள்ளச்சாராய விற்பனை செய்து வருகின்றனர். பாண்டிச்சேரியில் விற்கப்படும் பாக்கெட் சாராயத்தை காரைக்காலிலிருந்து கடத்தி வந்து ஒரு பாக்கெட் ரூ.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாடமுடியாத சூழல் மேலும் அடிதடியும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுத்த மறுநாளே மீண்டும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து வருகிறது. காவல் துறையினர் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகின்றனர். ஆகவே கிளியனூர் பகுதியில் முற்றிலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து உரிய நடவடிகை எடுக்கப்படும் என்று ஆர்டிஓ உறுதி அளித்தார்.

Tags : Mayiladuthurai ,Cleanur ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...