×

கிளை நூலகம், சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர், ஜன. 22: இனாம் கரூர் கிளை நூலகம் மற்றும் 1098 சைல்டு லைன் ஆகியவற்றின் சார்பில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை விஜயா வரவேற்றார். நூலக வாசகர் வட்ட நெறியாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். சைல்டு லைன் கருத்தாளர்கள் பாரதி, கார்த்திக், அறக்கட்டளை நிர்வாகிகள் கல்யாண சுந்தரம், ராஜா உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், பிரச்னைகைள எப்படி எதிர்கொள்ள வேண்டும், நடக்கும் விஷயங்கள் குறித்து பெற்றோர்களிடம் எவ்வாறு கூற வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தனர். இனாம் கரூர் கிளை நூலக நூலகர் மோகனசுந்தரம் நன்றி கூறினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் வெண்ணைமலை தனியார் பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு