×

பராமரிப்பு பணிகள் எதிரொலி தாமதமாக செல்லும் ரயில்கள்

கரூர், ஜன. 22: பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர்- வஞ்சிபாளையம் இடையே பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் திருச்சி பாலக்காடு பாசஞ்சர் ரயில் ஈரோடு- திருப்பூர் மார்க்கத்தில் 21ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை 25 நிமிடங்கள் தாமதாக செல்லும். இதேபோன்று பிலாஸ்பூர்- திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் ரயில் 21ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை ஈரோடு- திருப்பூர் மார்க்கத்தில் 70 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா