×

குளித்தலையில் சாலை பாதுகாப்பு வார கையெழுத்து இயக்கம்

குளித்தலை, ஜன. 22: தமிழகத்தில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா ஒருவாரம் நடைபெறுகிறது. இதன் முதல் நாள் குளித்தலை போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விதிகளை கடைபிடிப்போம் என உறுதிமொழி ஏற்கும் கையெழுத்து இயக்கம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குளித்தலை டிஎஸ்பி கும்மராஜா தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திருநாவுக்கரசு, பாலமுருகன், வெங்கடேஷ், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சின்னத்திரை மூலம் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பாடல்களும் ஒளிபரப்பப்பட்டன. அதனைத்தொடர்ந்து சாலை விதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இறுதியாக பொதுமக்கள் ஏராளமானோர் சாலை விதிகளை கடைபிடிப்போம் என உறுதிமொழி ஏற்று பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கையெழுத்திட்டு சென்றனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு