×

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

சுரண்டை, ஜன. 21: சேர்ந்தமரம்  அருகே உள்ள வடநத்தம்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன் மகன்  வசந்தகுமார் (18). இவர், கடந்த 17ம் தேதி நண்பர்  மாரிக்கனியுடன் குற்றாலத்திற்கு பைக்கில் சென்றார். கள்ளம்புளி அருகே செல்லும்போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், வசந்தகுமாரின் தலையில் பலத்த காயமடைந்தார். மாரிக்கனிக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.அப்பகுதியில் நின்றிருந்தவர்கள், இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி  தரப்பட்டு மேல்சிகிச்சைக்காக வசந்தகுமார், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சேர்ந்தமரம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது