×

அம்பை நகராட்சி பகுதியில் ரூ.4 கோடியில் சாலை பணி

அம்பை, ஜன. 21: அம்பை நகராட்சி பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை முருகையாபாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அம்பை நகராட்சிக்குட்பட்ட என்ஜிஓ காலனி, பண்ணை சங்கரய்யர் நகர், முடப்பாலம் நதியுன்னி கால்வாய், கோயில்குளம் - சாட்டுப்பத்து போன்ற பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.135 கிமீ தூரத்திற்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி மற்றும் பிற திட்டப்பணிகளின் தொடக்க விழா நடந்தது. அதிமுக அமைப்பு செயலாளர் முருகையாபாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அம்பை நகராட்சி ஆணையாளர் ஜின்னா (பொறுப்பு) முன்னிலை வகித்தார்.   பணி மேற்பார்வையாளர் சோலைசாமி வரவேற்றார். வி.கே.புரம் நகராட்சி ஓவர்சீயர் சரவணன், அதிமுக நகர செயலாளர்கள் அறிவழகன், ராமையா, துணை செயலாளர் மதன், மினிசூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கரலிங்கம், அம்பை நகராட்சி முன்னாள் துணை தலைவர் மாரிமுத்து. அர்பன் வங்கி துணை தலைவர் பிராங்கிளின், மாவட்ட பிரதிநிதி சுடலை, முன்னாள் கவுன்சிலர்கள் விஜயபாலாஜி, ரமேஷ், அக்பர்ஷா, ஒப்பந்ததாரர் மாடசாமி, அசோக், அருண், ஜான்கென்னடி, கணேசன், சண்முகசுந்தரம், பாலா, பிச்சைராஜன், இசக்கிமுத்து, இசக்கி, வெடிவேலன், தங்கப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ambai ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் திடீர் மாற்றம்