×

இருவேறு விபத்துக்களில் 2 பெண்கள் பலி: 3 பேர் படுகாயம்

மானாமதுரை/திருப்புவனம், ஜன.21: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மற்றும் திருப்பாச்சேத்தி அருகே நடந்த விபத்துக்களில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சோக்கு. இவரது மனைவி பாப்பா(70). தற்போது மூங்கில் ஊரணி பகுதியில் வசித்து வந்தார். நேற்று பகல் பாப்பா சோனையா கோயில் அருகே நடந்து சென்றபோது மானாமதுரையில் இருந்து பரமக்குடி சென்ற அரசு டவுன்பஸ் பாப்பா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்புவனம்:  இதேபோல் திருப்பாச்சேத்தி அருகே சென்ற காரின் டயர் வெடித்து பள்ளத்தில்  கவிழ்ந்ததால் ஒரு பெண் பலியானார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். மதுரையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேந்திரன். இவரது சொந்த ஊர் ராமேஸ்வரத்தில்  நேற்று நடந்த விழாவில் பங்கேற்றுவிட்டு மனைவி பூங்கொடியுடன் காரில் மதுரை திரும்பி னார் .அப்போது திருப்பாச்சேத்தி பைபாஸ் ரோட்டில் நாச்சியம்மன் கோயில் அருகே  வந்தபோது கார் டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலைதடுமாறி கட்டுபாட்டை இழந்து ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பூங்கொடி(56) உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : women ,accidents ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது