×

சிங்கம்புணரி ஆ.தெக்கூரில் நாளை மின்தடை

திருப்புத்தூர், ஜன. 21: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி, ஆ.தெக்கூர் துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது. திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட சிங்கம்புணரி, ஆ.தெக்கூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன. 22) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலம், காளாப்பூர், பிரான்மலை மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களிலும், ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொண்ணத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர் மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களிலும், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். 

Tags : Singampunnari A. Thekur ,
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்