×

சாலை பாதுகாப்பு வார விழா தொடக்கம்

சிவகங்கை, ஜன. 21:  சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டாரப் போக்குவரத்துத்துறை மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 31வது சாலைப் பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்து சாலைப்பாதுகாப்பு குறித்து பேசினார். அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்தில் சாலைப் பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிப்பது குறித்த கண்காட்சி அரங்கை பார்வையிட்டார். 20.01.2020 முதல் 27.01.2020 வரை ஒரு வாரத்திற்கு நடத்தப்பட உள்ள சாலைப்பாதுகாப்பு வார விழாவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் செந்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார், சிவகங்கை ஆர்டிஓ செல்வகுமாரி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மஞ்சுளாபாலச்சந்தர், துணை பொது மேலாளர்கள் சுந்தரபாண்டியன், அழகர்சாமி, நளன்கிள்ளி, வட்டாரப் போக்குவரத்துக் கழக ஆய்வாளர் பிரபாகரன், சிவகங்கை தாசில்தார் மைலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,
× RELATED சபரிமலை சீசன் தொடக்கம்...