×

மாவட்டம் பழமையான பஸ்நிலையத்தில் விழிபிதுங்கும் இடநெரிசல் அடிப்படை வசதிகளும் இல்லை பயனற்று கிடக்கும் சுகாதார வளாகம் விருதுநகர் உழவர் சந்தை ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரிக்கை

விருதுநகர், ஜன. 21:  விருதுநகர் அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இனாம்ரெட்டியபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் கடந்த 1990ல் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்தது. ஆனால், இந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சில தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, கலெக்டர் தலையிட்டு ஆதிதிராவிட நலத்துறை நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, நிலம் இல்லாத இனாம்ரெட்டியபட்டி கிராம ஆதிதிராவிட குடும்பங்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

Tags : district ,bus stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை