×

குடிப்பதை கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

மதுரை, ஜன. 21: இரண்டு முறை தற்ெகாலைக்கு முயன்று தோற்றுப்போன தொழிலாளி, மூன்றாவது முறை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை செல்லூர் வைத்தியநாதபுரம் மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் மணி (48). கூலி தொழிலாளி. தினமும் குடித்து விட்டு வந்ததால் மனைவி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மனைவி ஹேமா செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இவர் குடிப்பதை கண்டித்ததால் ஏற்கனவே 2 தடவை தற்கொலைக்கு முயன்றதும், அப்போது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து காப்பாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை