×

ஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் பட்டாசு வெடித்தவர் சாவு

மதுரை, ஜன.21: மதுரையை அடுத்த ஆனையூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டிகுமார் (39). இவர் பொங்கல் பண்டிகையன்று வீட்டின் முன்பு பட்டாசு வெடித்தார். அப்போது பட்டாசு தீ ஆடையில் பட்டு தீப்பிடித்து உடல் கருகினார். உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து மனைவி கிருஷ்ணவேணி, கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு