லால்குடி, ஜன.21: லால்குடி அருகே பெருவளநல்லூர் புள்ளம்பாடி வாய்க்காலில் உடம்பில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர் உடலை போலீசார் கைப்பற்றி கொலை செய்யப்பட்டு சடலத்தை வாய்க்காலில் வீசியுள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் வடக்கு புதுகாலனியை சேர்ந்தவர் பெரியசாமி (74). அதே பகுதியில் பெரியசாமி சைக்கிள் மற்றும் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் இவர் பெருவளநல்லூர் வடக்கே உள்ள புள்ளம்பாடி வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றார். வெகுநேரமாகியும் பெரியசாமி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உடலை தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் புள்ளம்பாடி அருகே வந்தலை கூடலூர் பகுதியில் புள்ளம்பாடி வாய்க்காலில் ஆண் சடலம் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.