×

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் துண்டுபிரசுரம்

காடையாம்பட்டி, ஜன.21: காடையாம்பட்டி பகுதியில், பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் குடியுரிமை சட்டத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். தொடர்ந்து காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட அக்கட்சியினர், குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் நரசிம்மன், நடராஜன், மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட நிர்வாகிகள் சுப்ரமணி, லெனின்துரை, ராஜ்குமார், ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செல்வம், சதீஸ், நாகம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : BJP ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...