×

பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் ரஜினி மீது எஸ்பியிடம் புகார்

தர்மபுரி, ஜன.21: பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக, நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரூர் பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவர், தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 14ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த ஒரு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து அவதூறாக பேசியுள்ளார். பெரியார் தமிழ் சமூகத்தின் அடையாளமாகவும், மரியாதைக்குரிய தலைவராகவும் போற்றப்படுபவர். நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு இருபிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே, பெரியாரை இழிவுபடுத்தி பொய்யான தகவல்களை வெளியிட்டும், இருபிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Rajini ,SP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்