×

தர்மபுரி நகரில் கடும் பனிபொழிவு

தர்மபுரி, ஜன.21: தர்மபுரி நகரில், அதிகாலையில் கடும் பனிபொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் இரவு 10 மணிக்கு  மேல், சீதோஷ்ண நிலை குளிர துவங்கி அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அதிகாலை நேரத்தில் நெடுஞ்சாலைகளில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவுக்கு பனி மூட்டமாக இருப்பதால், வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்ல வேண்டியுள்ளது. பனி  அதிகரிப்பால், காலை நேரத்தில் வாக்கிங் செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக  குறைந்துள்ளது. நேற்றைய வெப்பநிலை குறைந்த பட்சமாக 15 டிகிரி செல்சியஸ்  நிலவியது. தொடர் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Dharmapuri ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...