×

வங்கிகள் இணைப்பை கைவிட கோரி ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஐன.21: வங்கிகள் இணைப்பை கைவிட கோரி திருவாரூரில் நேற்று வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், வாடிக்கையாளர்களுக்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை நிறைவேற்ற வேண்டும், வாரா கடன்களை வசூல் செய்ய வேண்டும், கார்பரேட் நிறுவனங்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பனகல் சாலையில் இயங்கி வரும் தேசிய வங்கி கிளை முன்பாக வங்கி ஊழியர் கூட்டமைப்பு தலைவர் காளிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் ராஜவேல், ஜெயின், கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : union protest ,
× RELATED பங்கேற்க கலெக்டர் அழைப்பு அரியலூரில்...