நீடாமங்கலம்,ஜன.21: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பெரம்பூர் ஊராட்சியில் ஆரோக்கிய இந்தியா மிதிவண்டி தினத்தினையொட்டி மாணவர்கள்,இளைஞர்கள் பங்கேற்கும் மிதிவண்டி விழிப்புணர்வு பிரசாரத்தை ஒன்றியகுழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) உஷாராணி முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்பாரதி மோகன் ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் மாணவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.