×

திரளான பக்தர்கள் பங்கேற்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருத்துறைப்பூண்டி. ஜன.21: திருவாரூர்மாவட்ம் திருத்துறைப்பூண்டியில் காவல்துறை சார்பில் 31 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் காவலர்கள், பொதுமக்கள் பங்கேற்ற வாகன பேரணியை டிஎஸ்பி பழனிச்சாமி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு, துண்டு பிரசுரங்களை வழங்கினார். பேரணி நகரில் முக்கிய வீதிகள் வழியாக வேதை சாலை வரை சென்றது. இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி,எஸ்.ஐக்கள் மற்றும் காவலர்கள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Devotees ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...