அரியலூர், ஜன. 21: அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் மின் நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.