×

உடையார்பாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம்,ஜன.21: அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் 31வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இந்ந பேரணியை உடையார்பாளையம் எஸ்ஐ சாலை பாதுகாப்பு பேரணியை துவக்கி வைத்து பேசினார். இந்த பேரணியில் உடையார்பாளையம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு மது போதையில் வாகனம் ஓட்டகூடாது, சீட்பெல்ட் அணிந்து கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும், பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்தல் கூடாது, இருசக்கர வாகனங்களில் 2பேர் மட்டும் அமர்ந்து செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டு சென்றனர். பேரணி யானது உடையார்பாளையம் வெள்ளைப்பிள்ளையார் கோயிலில் துவங்கி கடைவீதி வழியாக பேருந்து நிறுத்ததில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Udaiyarpalayam ,
× RELATED உடையார்பாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சார கூட்டம்