×

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்

அரியலூர், ஜன. 21: அரியலூரில் பாஜக சார்பில்குடியுரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் நேற்று வழங்கப்பட்டது. அதன்படி அரியலூர் தேரடி, சத்திரம், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட பாஜக சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நேற்று வழங்கப்பட்டது.திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணி, மாவட்ட தலைவர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் நடராஜன், நகர தலைவர் கோகுல்பாபு, மாநில விவசாயிகள் அணி செயற்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...