×

இசிஆர் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி தாய், மகன் பலி: மாமல்லபுரம் அருகே பரிதாபம்

மாமல்லபுரம், ஜன. 21: மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற தாய், மகன் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. மீனவர். இவரது மனைவி திலகவதி (35). இவர்களது மகன் திருமுருகன் (40). கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தான். தற்போது திலகவதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை திலகவதி, மகனை அழைத்து கொண்டு பள்ளிக்கு புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் செல்வதற்காக, சாலையை முயன்றனர்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார், அவர்கள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 2 பேரும், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். இதை பார்த்ததும் காரை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பிவிட்டார். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், மனைவியும், மகனும் விபத்தில் இறந்த நேரத்தில் சத்தியமூர்த்தி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தார். அவருக்கு வாக்கி டாக்கி கருவி மூலம் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக கரை திரும்பிய சத்தியமூர்த்தி தனது மனைவி மற்றும் மகனை பார்த்து கதறி அழுதார்.

Tags : road ,ICR ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...