×

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 234 மனுக்கள் குவிந்தன

திருவள்ளூர், ஜன. 21: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் பல்வேறு குறைகள் குறித்து மனுக்களை அளித்தனர். இதில் பட்டா மற்றும் சிட்டா கோரி 78 மனுக்கள், முதியோர் உதவித்தொகைகோரி 23 மனுக்கள், கடனுதவி கோரி 7 மனுக்கள், ரேஷன் அட்டை கேட்டு 10 மனுக்கள், வேலைவாய்ப்புகோரி 37 மனுக்கள் உட்பட மொத்தம் 234 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்

Tags : petitions ,
× RELATED 5 ராஜ்குமார், 3 ராமச்சந்திரன் கோவையில் போட்டி