முதியவரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

கோவில்பட்டி, ஜன.21: கோவில்பட்டியில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி வீரவாஞ்சிநகரை சேர்ந்தவர் பெருமாள் (66). இவர் கோவில்பட்டி பார்க்ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கோவில்பட்டி வீரவாஞ்சிநகரை சேர்ந்த முத்துபாண்டி மகன் சின்னராஜ் (32), முருகன் மகன் பூல்பாண்டி (28), குருமலையை சேர்ந்த கருப்பசாமி மகன் கொம்பையா (32), கடம்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் துரைப்பாண்டி (30) ஆகிய 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் பெருமாள் அளித்த புகாரின்பேரில் சின்னராஜ், பூல்பாண்டி, கொம்பையா, துரைப்பாண்டி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: