கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான 2பேருக்கு வலை

தூத்துக்குடி, ஜன.21: முக்காணி யாதவர் தெருவை சேர்ந்தவர் அய்யாத்துரை மகன் மாரியப்பன் என்ற முண்டன் (32). இவர் மீது முத்தையாபுரம் காவல்  நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இவர் கடந்த 25.11.19 அன்று ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற எழுத்தர் ஞானசந்திரா தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மாரியப்பன் என்ற முண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரத்தினகோபால் (45). இவர் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இவர் 12.4.2001 அன்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற எழுத்தர் ஞானசந்திரா தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரத்தினகோபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: