உடன்குடி,ஜன.21: மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உடன்குடி ஒன்றியத்தில் 23 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. உடன்குடி யூனியனில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் பாலசிங் முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஊராட்சி தலைவர்கள் மெஞ்ஞானபுரத்தில் கிருபா, லெட்சுமிபுரத்தில் ஆதிலிங்கம், செம்மறிக்குளத்தில் அகஸ்டா மரியதங்கம், நங்கைமொழியில் விஜயராஜ், செட்டியாபத்தில் பாலமுருகன், யூனியன் கவுன்சிலர்கள் செல்வின், தங்கலெட்சுமி ஆதிலிங்கம் ஆகியோர் அந்தந்த முகாமில் சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தனர். இதில் டாக்டர் ஐயம்பெருமாள், யூனியன் துணைச்சேர்மன் மீரா, சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.