விவசாயியிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

சாத்தான்குளம், ஜன. 21: சாத்தான்குளம் அருகே விவசாயியை வழிமறித்து பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.   சாத்தான்குளம் அருகே  உசரத்துக்குடியிருப்பை சேர்ந்தவர் திருமணவேல் (52). விவசாயியான இவர் அதிமுக கிளை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். திருமணவேல் நேற்று முன்தினம் பைக்கில் தட்டார்மடம் சென்றார். காந்திநகரில் உள்ள திருமண மண்டபம் அருகில் வந்தபோது சொக்கன்குடியிருப்பு தணிஸ்லாஸ் மகன்கள் செல்வன், பங்கராஸ் (எ) ராஜன் (30) ஆகியோர்   வழிமறித்து செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் சட்டை பாக்கெட்டிலிருந்து  பணம் எடுக்க முயன்றுள்ளனர். தொடர்ந்து  இருவரும் திருமணவேலை  கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர்.  இதுகுறித்து திருமணவேல் தட்டார்மடம்  போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தட்டார்மடம்  இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் வழக்குபதிந்து பங்கராஸ் என்ற ராஜனை  கைது செய்து செல்வனை தேடி வருகின்றனர். பங்கராஸ் (எ) ராஜன் மீது தட்டார்மடம் காவல் நிலையத்தில் பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என  போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: