திருச்செந்தூர், ஜன.21: திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை உஷா முன்னிலை வகித்தார். விழாவில் கோலப் போட்டி, கும்மி, கோலாட்டம், கபடி மற்றும் கிராமிய நிகழ்ச்சி நடந்தது. விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
உடன்குடி: குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் செந்திலாறுமுகம் நினைவுப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளித்தாளாளர் ராதா ஆனந்தகுமார் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத்தலைவி சொர்ணப்பிரியா கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, கோலமிடுதல், உறியடித்தல், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது.