×

குமரன் கல்லூரியில் பொங்கல் விழா

திருப்பூர், ஜன. 21: திருப்பூர் குமரன் கல்லூரியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில், துறை வாரியாக மாணவிகள் பொங்கல் வைத்தனர். அனைத்து மாணவிகளும் பட்டுப்புடவை அணிந்து உற்சாகத்துடன் காணப்பட்டனர். பொங்கல் பொங்கியபோது, ‘பொங்கலோ பொங்கல்‘ என ஒலியெழுப்பி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொங்கல், கரும்பு மற்றும் பழங்கள் வைத்து பூஜை செய்து, இறைவனை வழிபட்டனர். வட்டமாக நின்று கும்மியடித்து பாட்டு பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து உறியடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் மற்றும் துறை பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ். ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் அனைத்து மாணவிகளுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Tags : Pongal Festival ,Kumaran College ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...