உடுமலை, ஜன. 21: உடுமலையில் கால்நடை மருத்துவர் சந்தைக்கு தாமதமாக வந்ததால்இலவச ஆடுகளை பெற வந்த பயனாளிகள் மிகுந்த அவதியடைந்தனர்.உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜல்லிப்பட்டியில் நேற்று தமிழக அரசு சார்பில் இலவச ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் 300 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கிராமங்கள்தோறும் ஏழை, எளிய பெண்கள் வாழ்வில் முன்னேறுவதற்காக இலவச ஆடு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் ஆடு இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் சந்தைகளுக்கு சென்று நான்கு ஆடுகளை வாங்கிய பிறகு ஆடுகளுக்கான தொகையை கால்நடை மருத்துவர் வழங்குவது வழக்கம். நேற்று காலை சந்தை துவங்கிய போது 300 பயனாளிகளும் தலா நான்கு ஆடுகளை வாங்கி அவற்றை விற்ற வியாபாரிகளுக்கு உடுமலை வாரச்சந்தையில் 4 ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் பயனாளிகளுக்கு கொட்டகை அமைக்க ரூ.2,500 வழங்கப்படும். இதில் பயனாளிகளுக்கு உரிய தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும்.