×

சேவல் சண்டை: 3 பேர் சிக்கினர்

பாலக்காடு, ஜன. 21:கேரள  தமிழக எல்லை கொழிஞ்சாம்பாறை அடுத்த வேலந்தாவளம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கொழிஞ்சாம்பாறை எஸ்.ஐ., மகேஸ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுப்பட்டிருந்தனர். வடகரப்பதி ஊராட்சிக்குட்பட்ட ஒழலப்பதி பகுதியில் தோப்புக்குள் சேவல் சண்டை சூதாட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய இடங்களிலிருந்து வந்த நபர்கள் ரொக்கப் பணம் பந்தயம் வைத்து சூதாடினர். மாறுவேடத்தில் சென்ற போலீசாரை பார்த்து அலறிஅடித்து தப்பிவிட்டனர். இவர்களில் ஒழலப்பதி அனுப்பூரைச் சேர்ந்த ஷான்பாஷா (28), நவீன் பிரசாத் (23) பொள்ளாச்சி எல்லப்பட்டான்கோவிலைச் சேர்ந்த ரமேஷ் (34) ஆகியோர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 200 ரூபாய் மற்றும் 8 கட்டுச்சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை ஏலத்தில் விடப்பட்டமையால் ரூ.16 ஆயிரத்து 600 வசூலானது. ஏலப்பணம் சித்தூர் முதல் வகுப்பு மாதிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என எஸ்.ஐ., மகேஸ்குமார் தெரிவித்தார்.

Tags : Cock fight ,
× RELATED அரவக்குறிச்சி அருகே களைகட்டியது சேவல் சண்டை