மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பாபநாசம், ஜன. 21: பாபநாசம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். பாபநாசம் அடுத்த மணக்குடியை சேர்ந்தவர் ஜெயராமன் (40). இவர் கடந்த 11ம் தேதி ஊரிலுள்ள டிரான்ஸ்மார்மரில் பியூஸ் போட முயன்றார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஜெயராமன் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Related Stories: