முன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை கைது செய்யகோரி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜன. 21: கரூர் டோல்கேட்டில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை கைது செய்யக்கோரி கும்பகோணம் காந்தி பூங்கா முன் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணத்தில் நடந்த குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கடந்த 18ம் தேதி பங்கேற்றார். பின்னர் கும்பகோணத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் புறப்பட்டு சென்றார். கரூர் டோல்கேட்டில் செல்லும்போது பாலபாரதியை அங்கிருந்த ஊழியர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.

இந்த சம்பவத்தை கண்டித்து சிபிஎம் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் நேற்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிபிஎம் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன், காங்கிரஸ் அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாலசுப்பிரமணியன், மனிதநேய மக்கள் கட்சி ராஜ்முகம்மது, இந்திய தவ்ஹீத் ஜமாத் ஜாபர், ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து இஸ்லாமி உலவி, மக்கள் அதிகாரம் ஜெயப்பாண்டியன், சிபிஎம் ஜீவபாரதி, ஜேசுதாஸ், பக்கிரிசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.

Related Stories: