டிரைவர் தப்பியோட்டம் பாபநாசத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம்

பாபநாசம், ஜன. 21: பாபநாசத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது. சுப்பு.தங்கராசன் தலைமை வகித்தார். மதிப்பியல் தலைவர் கந்த சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் அரிமா துரைசாமி வரவேற்றார். பொருளாளர் சண்முகம் வரவு செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெற்றார். துணை செயலாளர் அமிர்தராஜ் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செங்கமலம், கணேசன், ராஜகோபாலன், ராஜசேகரன், கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: