மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிரக் பறிமுதல்

கும்பகோணம், ஜன. 21: கும்பகோணம் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிரக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மணல் கடத்தி வருவதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிழக்கு போலீசார் நேற்று முன்தினம் மதகடி தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நூதன முறையில் டிரக்கின் பின்னால் இரும்பு தகரத்தை கொண்டு மூடியவாறு வாகனம் சென்றது. அதை மறித்து கேட்டபோது மளிகை பொருட்கள் ஏற்றி செல்கிறோம் என பதிலளித்தனர்.

ஆனால் டிரக்கின் கீழே தண்ணீர் சொட்டி கொண்டிருப்பதையறிந்த போலீசார், வாகனத்தில் பின்புறமுள்ள பகுதியை திறந்து பார்த்தனர். அப்போது அனுமதியின்றி மணல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அப்போது டிரக்கின் டிரைவர் அங்கியிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து டிரக்கை பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவர் கிழக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: