தஞ்சை, ஜன.21: தஞ்சை சீனிவாசபுரம் அருகே சிங்கப்பெருமாள் குளக்கரையில் இரவு நேர டிபன் கடை உள்ளது. இங்கு கடந்த 17ம்தேதி இரவு 3 வாலிபர்கள் சாப்பிட்டனர். குடிபோதையில் இருந்த அவர்கள் சாப்பிட்டு முடித்த பின் பணம் தராமல் சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் பாலமுருகன் கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து அரிவாள், கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மேலும் 4 பேரை அந்த 3 வாலிபர்களும் அழைத்து வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பூமால்ராவுத்தர் கோவில் தெருவைச் சேர்ந்த குமரவேல் என்பவரின் மகன் லோகேஷ் அருண்செல்வம்(23) தாக்கினர். தொடர்ந்து டிபன் கடைக்குள் புகுந்து பாலமுருகனை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அருகிலிருந்தோர் அக்கும்பலை பிடிக்க முயன்றனர்.