×

விவசாயிகளுக்கு வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை தஞ்சையில் டிபன் கடையை அடித்து நொறுக்கிய கும்பலுக்கு வலை

தஞ்சை, ஜன.21: தஞ்சை சீனிவாசபுரம் அருகே சிங்கப்பெருமாள் குளக்கரையில் இரவு நேர டிபன் கடை உள்ளது. இங்கு கடந்த 17ம்தேதி இரவு 3 வாலிபர்கள் சாப்பிட்டனர். குடிபோதையில் இருந்த அவர்கள் சாப்பிட்டு முடித்த பின் பணம் தராமல் சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் பாலமுருகன் கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து அரிவாள், கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மேலும் 4 பேரை அந்த 3 வாலிபர்களும் அழைத்து வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பூமால்ராவுத்தர் கோவில் தெருவைச் சேர்ந்த குமரவேல் என்பவரின் மகன் லோகேஷ் அருண்செல்வம்(23) தாக்கினர். தொடர்ந்து டிபன் கடைக்குள் புகுந்து பாலமுருகனை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அருகிலிருந்தோர் அக்கும்பலை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள் தப்பி ஓடினர். இதில் அக்கும்பலை சேர்ந்த கலைமுகில்(23) என்பவர் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த பாலமுருகன், லோகேஷ் அருண்செல்வம், கலைமுகில் ஆகியோரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர். சவுராஷ்ட்ரா தெரு, தாராசுரம் மார்க்கெட், கொட்டையூர்- திருவையாறு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செயல்படுகிறதா என்பது கேள்வி குறியாகியுள்ளது.

Tags : gang ,tibbon shop ,agriculture professors ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை