×

மயிலாடுதுறை சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை, ஜன.21: சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை காவேரி நகர் சந்திப்பிலிருந்து புறப்பட்டபேரணியை டிஎஸ்பி அண்ணாதுரை துவக்கினார். சாலை விதிகளை கடைப்பிடிப்பது, தலைக்கவசம் அணிவதன் நன்மை போன்றவற்றை பற்றி விளக்கப்பட்டது. தங்களின் நண்பர்களுக்கும் இதுகுறித்து அறிவுத்த கூறப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகநாதன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்றனர். காவேரி நகரில் ஆரம்பித்த பேரணி பூக்கடைவீதி, காந்திஜிசாலை, பட்டமங்கல கடைவீதி, கால்டெக்ஸ் பகுதிவழியாக சென்று பூம்புகார் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தது.

Tags :
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்