×

கதண்டு கடித்து பள்ளி மாணவர்கள் 7 பேர் காயம்

காரைக்கால், ஜன.21: காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடியில் தனியார் உயர்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலை நேர வகுப்புகள் முடிந்ததும், வீட்டுக்கு செல்லும் மணி அடிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் துள்ளிக்குதித்து வீடு திரும்பினர். அப்போது, எங்கிருந்தோ பறந்துவந்த கதண்டு வண்டுகள் கூட்டம், மாணவர்களை கடித்ததாக கூறப்படுகிறது.

மாணவர்களின் அலறல் சப்தத்தை கேட்டு ஓடிவந்த பள்ளி நிர்வாகத்தினர், காயம் அடைந்த 7 மாணவர்களையும் உடனே காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனைவருக்கும் முதல் உதவி அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...