கள்ளக்குறிச்சி, ஜன. 21:கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின பொதுமக்கள் குறைகேட்புகூட்டம் நேற்று நடத்தது. கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, தனி துணை ஆட்சியர் (சமூக நலபாதுகாப்பு திட்டம்) சரவணன், மாவட்ட திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) பிரகாஷ்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கினர்.