×

விடுமுறை நாளான நேற்று படகு இல்லத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஊட்டி, ஜன. 20: விடுமுறை நாளான நேற்று ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகைக்கு கடந்த 15ம் தேதியில் இருந்து நேற்று வரை 5 நாட்கள்  பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்க தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.விடுமுறையை கொண்டாடுவதற்காக கடந்த செவ்வாய்கிழமை மாலை முதலே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தங்களும் களை கட்டியது. ஞாயிற்றுகிழமை வார விடுமுறையான நேற்று ஊட்டி ஏரியில் அமைந்துள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

இதுமட்டுமின்றி ஊட்டி ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய காத்திருந்து படகு சவாரி செய்தனர். இதே போல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களைகட்டியது. பூங்காவில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.

Tags : group ,yacht house ,holiday ,
× RELATED 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான...