ஊட்டி, ஜன. 20: குன்னூர் தற்காலிக பிரிவு எழுத்தராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மாற்று திறனாளி, கருணை கொலை செல்ல அனுமதிக்க ேவண்டும் என வலியுறுத்தி கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலங்களில் 12 பேர் தற்காலிக பிரிவு எழுத்தர்களாக பணியாற்றி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்ட வழங்கல்துறை பணிகள் கணினி மயமாக்கப்பட்டதால் தற்காலிக பிரிவு எழுத்தர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதில் குன்னூர் தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றி தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட மாற்று திறனாளியான விஜயகுமார் என்பவர், தனக்கு மாற்று பணி வழங்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக மாற்று திறனாளியான விஜயகுமார், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:குன்னூர், ஓட்டுப்பட்டறை, வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்த நான் ஒரு மாற்று திறனாளி.