லூர்து மாதா ஆலய தேர் பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

ஈரோடு, ஜன. 20:  ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் லூர்து மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல், நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 12ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, ஆலயத்தில் தினமும் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று நடந்தது. இதையொட்டி ஈரோடு ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் இருந்து தேர் பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் லூர்து மாதா, புனித செபஸ்தியார் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருந்தது. புனித அமல அன்னை ஆலயத்தில் துவங்கிய இந்த பவனி கச்சேரி வீதி, பன்னீர்செல்வம் பூங்கா, கடை வீதி, மணிக்கூண்டு, சத்தி ரோடு, பார்க் ரோடு, பவானி ரோடு வழியாக லூர்து மாதா ஆலயத்தை சென்றடைந்தது. பின்னர் மாதா ஆலய துணை பங்கு தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு நற்கருணை ஆராதனை நடந்தது. இதில் லூர்து மாதா ஆலயத்தின் பெரிய தந்தை ஜோபி மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: